Rajni Fans..Please boycot all film related to satyaraj

'யாரைப் பற்றி பேசினால் கைதட்டல் கிடைக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் செய்ய மாட்டேன். அதற்காக நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டுமானாலும் செய்வேன்'

இது சத்யராஜின் லேட்டஸ்ட் பன்ச் டயலாக். சக நடிகர்களெல்லாம் அரசியலை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கும்போது எந்தவொரு நடிகனுக்கும் இருக்கும் ஆற்றாமை இப்படி எரிச்சலாய் வெளிப்படுவது இயற்கைதான். அப்படி என்னதான் பேசினார்? நமது சிறப்பு பிரதிநிதி விஜயப்பாவின் கருத்தைக் கேட்டோம்.

'சத்யராஜ்க்கு நக்கல் அடிக்க மட்டும்தான் ஸார் தெரியும். வாழ்க்கையில எதையும் அவரு சீரியஸா எடுத்துக்கிட்டது கிடையாது. இந்த முறை சீரியஸா பேசறதா நினைச்சு கத்தியிருக்கார். ஆனா, அது காமெடியா மாறிப்போயிடுச்சு.

இதில் எம்.ஜி.ஆர் பேரை வேறு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கார். சிக்கன், மட்டன் சாப்பிட்டாராம். ஆனா, தண்ணீர் குடிக்கலையாம். அப்போ அந்த சிக்கன், மட்டனை எதில் செய்தார்களாம். எம்,ஜி,ஆருக்கு இப்படியொரு முட்டாள் ரசிகனா?

ரஜினிக்கு கிடைத்த கைதட்டல்தான் அவருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ரஜினி வந்த பிறகு கூடியிருந்த கூட்டம் 3 மடங்காக ஆகிவிட்டது என்று மாலை முரசு வேறு செய்தி வெளியிட்டிருந்தது. ரஜினி ரசிகர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கர்நாடக அமைப்புகளை கண்டிக்கும் போராட்டம்தான் என்றாலும் ரஜினி ரசிகர்களால் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லையே..அப்படியிருந்தும் சத்யராஜ்க்கு என்ன கோபம் என்பதுதான் புரியவில்லை. அப்படி கோபம் என்றாலும் அதை வெளிப்படுத்த வேண்டிய இடம் வேறு. இப்படி பொது மேடையில் காட்டுக்கத்தல் கத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.

பேச்சின்போது நிறைய இடங்களில் என்ன பேசுவதென்பதே அவருக்கு மறந்து போனது வெளிப்படையாக தெரிந்தது. பல இடங்களில் கர்நாடகாவையும், ஒகேனக்கலையும் மறந்து போயிருந்தார். இத்தனைக்கும் என்ன பேசவேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறார். விகடன் பேட்டியில் அவர் பேசியிருப்பதையும் மேடையில் பேசியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது.

ரஜினி மீது அவருக்கு பொறாமை, கோபம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். ஆனால், இப்போது தமிழன் என்கிற அடையாளத்தில் பேசுவதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்ர்களையும் அதிர்ச்சிக்கும் அவமானத்திற்குள்ளாக்கியிருக்கிறார். சத்யராஜ் போன்ற பொறுப்பற்ற நடிகர்களை தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக முன்னால் நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அவமானம்.'

0 comments: