Class room letcure : Topic-Sivaji By Non Indian-Malaysia

Talaivar-Eelam

Rajini Credit Card

<br/><a href="http://video.msn.com/video.aspx?vid=492ce554-a7ff-4d95-8dc1-819646d52f4d" target="_new" title="Rajinikanth and Credit Card - Radio One">Video: Rajinikanth and Credit Card - Radio One</a>

Chumma-Ithu Eppadi Irukku ?

Rajini kanth show in Singapore (1995)

SS on Ayan

SS cast the vote

Hrithik act with Rajini sir

Here is Hrithik Roshan as a child artist in 3 movies...He has worked with Rajnikant in Bhagwaan dada.

Rajini mania

ஈழத் தமிழர்களை காப்போருக்கே ஓட்டு-ரஜினி ரசிகர்கள்

அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.

இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்

Next TR : 'so called next Superstar'

Watch it untill the end.Thank you

Rajini style and Aishu ...

Talaivar funny animation

How Rajini sir call Pooja

India's 50 - Most 'Power'



இந்தியாவின் 50 சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா டுடே இதழ், இந்தியாவின் டாப் 50 பிரமுகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்திய அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். ரஜினிகாந்த் இல்லாமல், இந்திய சினி்மாத்துறை இல்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

முன்பு பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த்தை இந்தியா டுடே விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத் துறையினரிடையே பெருந்தன்மையான மனதுக்குச் சொந்தக்காரராக ரஜினி விளங்குகிறார். பாபா, குசேலன் படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களின் நஷ்டத்தைக் களைய பல கோடி ரூபாய்களை திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் ரஜினி எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

Super Edit 2

Super Edit

ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம்


Bangalore: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர்.

ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் பலர் பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.

எந்திரன் படத்தின் டைட்டில் பாடல் !

Pic : shankar,madhusree & talaivar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தின் டைட்டில் பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், விவேக் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.

இப்படத்தின் டைட்டில் பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக படமாக்கவுள்ளார் ஷங்கர்.

ஷங்கர் டைப் பாடலமாக இது இருக்குமாம். இந்தப் பாடலில் ஹீரோ ரஜினி மீதான தனது காதலை பொழிந்து ஐஸ்வர்யா ராய் பாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கியுள்ள கண்கவர் பிரமாண்ட செட்டில் வைத்து இந்தப் பாடலை படமாக்கவுள்ளனர். படத்தின் பிரமாண்ட ஹைலைட்டாக இது அமையும்.

இந்தப் பாடலலில் ஐஸ்வர்யாவுடன் 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் பங்கேற்கின்றனர். அனைவரும் ரஜினி இப்படத்தில் அணிந்து நடித்துள்ள சில்வர் கிரே கலரிலான உடையில் வருகின்றனராம்.

படமாக்கப்படவுள்ள இந்தப் பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மதுஸ்ரீ குரலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட பெரும் பொருட் செலவிலான பாடல் காட்சிகளில் இதுவும் ஒன்றாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், குரூப் டான்ஸர்கள் போட்ட டிரஸ்ஸே படு காஸ்ட்லியாம்.

Superstarrru Yarunnu Ketta 4

Superstarrru Yarunnu Ketta 3

superstarru Yarunnu Ketta 2

Superstarrru Yarunnu Ketta..

Ramesh Kanna About Rajini Fans - Must Watch

Talaivar Intro - KB Oru Sahabtham

Actor Baskar About SIVAJI

நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் திருமணம்


நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு பாபுவுக்கும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ். சுதீகர் ரெட்டியின் மகள் விரானிகாவுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.

விஷ்ணு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு- விரானிகா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌளி உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. சினிமா செட்கள் போல அமைத்து மிகப் பிரமாண்டமாக இத்திருமணம் நடத்தப்பட்டது.

இதில் ரஜினி, அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.

இசைஞானி இளையராஜா, இயக்குனர் பி.வாசு ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். நடிகைகள் ஜெயசுதா, ஜெயபிரதா, ஜமுனா, ஜீவிதா, பிரியாமணி மற்றும் தாசரி நாராயணராவ், தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பிரபாஸ், அல்லு அரவிந்த், உள்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பால், அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Rajni Chienese Fan -Singapore

Kamal About Rajini Sir -Flash Back

ரஜினியும் - கமலும்


தென்னிந்தியத் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- கலைஞானி கமல்ஹாசன் இருவரும் கன்னட சினிமாவின் 75ம் ஆண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

கன்னட சினிமாவுக்கு இது 75வது ஆண்டு. இதனைக் கொண்டாடும் வகையில் பெங்களூரில் மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் மிகப் பெரிய திருவிழா அளவுக்கு நடைபெற உள்ளன.

தமிழ் சினிமாவை என்னதான் புறக்கணிக்க முயன்றாலும் டப்பிங் படங்களாக, ரீமேக் படங்களாக மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவுடன் கன்னடத் திரையுலகம் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

இன்னொரு பக்கம், இன்று இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் முதல்நிலை நாயகர்களான ரஜினியும் கமலும் கன்னடத் திரையுலகுக்கு ஆரம்ப கட்டத்தில் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர்.

கதாசங்கமம், சகோதர சவால், கலாட்டே சம்ஸாரா.. என பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார் ரஜினி. கமலும் சளைத்தவரல்ல.. பெங்கியல்லி அரலித ஹூவு, மரியா மை டார்லிங், ராமா ஷாமா பாமா என அவரும் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த இரு சாதனையாளர்களுமே விழாவுக்கு வர ஒப்புக் கொண்டிருப்பது கன்னடத் திரையுலகினரை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அம்ருதா மஹோத்ஸவா எனும் பெயரில் நடக்கும் இந்த திரைத் திருவிழாவை கர்நாடக அரசும் கர்நாடக பிலிம் சேம்பரும் நடத்துகின்றன. இவர்களுடன் உதயா டிவி மற்றும் சன்பீஸ்ட் குரூப் நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.

நாளை மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விழாவைத் துவக்கி வைக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

ரஜினி, கமல் தவிர தெலுங்கு, மலையாளத் திரையுலக முக்கிய பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

'ரஜினி- கமல் இரு சாதனையாளர்களும் விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டதே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இந்த விழாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இதைக் கருதுகிறோம்', என்று கன்னட பிலிம் சேம்பர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arasan




Fans Collection








Rajni Statue-Banner-Arts










ஐஸ்வர்யா =சர்மிழி


Hi, This is Aravindan. First of all, I thank Behindwoods for publishing my previous article. I am posting this mail to give you further interesting information about ENDHIRAN. I have attached a photo of the Boss as a scientist. He looks very professional in this photo. I think his French beard is gonna become a fashion rage in coming days among youngsters.The name of Ash in this film is Sharmili. She performs a college girl role in this film. Santhanam acts as her brother and Karunas comes as an assistant to the Boss. The villain role is performed by a veteran hindi actor.

By, A.S. Aravindan
aravindan333@gmail.com

From:behindwoods.com

ரஜினியின் ரஜினியாக - Rare : Malaysia/Japan


Refreshment

Sivaji Chipmunks

The Robo Music Director Wins the Oscar

Local Fans And foreign Fans of Rahman

Rahman fans Pray at chennai temples



''எல்லாப் புகழும் இறைவனுக்கே'': ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசிய ரஹ்மான்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ரஹ்மானுக்கு தங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இருவரும் ரஹ்மானுக்கு போன் செய்து தங்கள் சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் கூறினர். ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான் என ரஜினி கூறியுள்ளார்.

Poem For Rahman Ji

ரோஜாவில் பூத்த ராஜாவே
உங்கள் இசையோடு
புலம்பெயாந்த
ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள்.

நூறு கோடி
இசைத் தொகுப்புகளால்
உங்கள் முகம்
உலகமெங்கும் விரிகிறது.

இசைக்கு மொழியில்லை என்று
உங்கள் இசையே
உலகுக்கு புரிய வைத்தது
இசைக்கு ஏது எல்லையென்று
உலக விருதுகளே
உங்களைத் தேடி வருகிறது.

ராஜாவின் இசைத் தாலாட்டில்
நாங்கள் நனைந்தாலும்
உங்கள் இசைகேட்டபோது தான்
துள்ளிக் குதித்து எழுந்தோம்.

தாயகத்தைப் பிரிந்து
நாங்கள் குளிர்க்கூடுகளில் வாழ்ந்தாலும்
உங்கள் இசையே
எங்கள் வீடுகளில் ஊர்வலம் போகிறது.

நீங்கள் மீட்டுகிற
கறுப்பு வெள்ளைக் கட்டைகள்
அது ஏழு கட்டையோ
அல்லது எட்டுக்கட்டையோ
உங்கள் இசை கேட்டால்
இதயம் மகிழ்கிறது.

அங்கே கொத்துக் கொத்தாய்
எம் மக்கள் அழிந்து போக
இங்கே தமிழ் வானொலிகளில்
"எந்தன் தேசத்தின் குரல்…"
பாடல்
உ(எ)ங்கள் குரலாய் தினம் ஒலிக்கிறது.

கன்னத்தில் முத்தமிட்டால்
திரைப்படத்திற்கு பல
விமர்சனங்கள் இருந்தாலும்
"விடை கொடு எங்கள் நாடே"
என்ற பாடல்
எங்கள் தாலாட்டாய் ஆனது.

சன்னங்கள் வெடித்துச் சிதற
எங்கள் தேசமே சிவக்கிறது
குருதி பெருகி வழியும்
நெஞ்சுக்குழிகள் காக்க
பதுங்கு குழிகளிலும்
உங்கள் இசை கேட்கிறோம்.

எங்கள் கண்ணிர் துளிகள்
காய்ந்து போக
உங்கள் இசைத் துளிகள்
மயிலிறகாய் மனம் தடவுகிறது.

பாரதிராஜாவின்
தாஜமகால் திரைப்படத்திற்கு
நீங்கள் இசையமைத்திருக்கலாம்
ஆனால் இனி
தாஜமகாலே பார்த்து அதிசயிக்கும்
உலக அதிசயமாய் நீங்கள்.

எங்கள் செவிவழி
இதயம் எங்கும் நிறைந்த
இசையப் புயலே
உங்கள் அடக்கமான வார்த்தைகளால்
எல்லாப் புகழையும்
இறைவன் உங்களுக்கே சேர்த்துள்ளார்.

உங்கள் இசைப் பாதையில்
எத்தனை முட்களை கடந்து
நீங்கள் ஒரு ரோஜாவில் மலர்ந்தீர்கள்.
எங்கள் விடுதலைப் பாதையில்
ஆயிரம் முதலைகளை கடந்து
நாங்களும் மீண்டும் மலர்வோம்.

இசை உலகில் உங்களுக்கு
கிடைத்த இந்த அங்கிகாரம்
எங்கள் தேசத்திற்கும்
ஒரு நாள் கிடைக்கும்
அன்று உங்களைச் சந்திப்போம்

இசையால்
உலகை வென்றவர் நீங்கள்
வாழ்க உங்கள் குடும்பம்
தொடரட்டும் உங்கள் இசைப்பய
ணம்!


81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.

இதில், ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான (ஒரிஜினல் ஸ்கோர்) ஆஸ்கர் விருது மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது ('ஜெய் ஹோ') வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு ஒருவித அச்சத்துடனும் அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ என் திருமணத்துக்கு வருவது போல படபடப்பாய் இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு என் தாயைத் தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி, அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி. விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்பைத் தந்த இயக்குனர் போய்ல், மும்பைக்கும் நன்றி.

இந்தப் படத்தின் மையக் கருத்தே நம்பிக்கை தான். என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

பின்னர் இந்திய தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசிய ரஹ்மான், என் சொந்த ஊரில் (சென்னை) உள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, இந்த விருதை இந்தியாவுக்கு சமர்பிக்கிறேன் என்றார் தமிழில்.

Tabla Style Remix

Rajini singapore 1992

ரஜினி ரஜினிதான் !


வயிறார சோறு போடுவதற்கு சமம், வாயார புகழ்வதும்!

சமீபத்தில் சில படங்களை பார்த்துவிட்டு அதில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் அழைத்து பாராட்டியதோடு, தனது சார்பாக மோதிரங்களையும் பரிசளித்து மகிழ்ந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

வேறு யாராவது நடிகர்கள் இப்படி செய்திருக்கிறார்களா என்று யோசித்து பார்த்தால், சமீபகாலங்களாக ஒருவரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். இப்படி இவர்களை அழைத்து பாராட்டுவதால் ரஜினிக்கு என்ன லாபம்? ஒன்றுமேயில்லை! ஆனாலும், பாராட்டுகிற மனசு மற்றவர்களுக்கும் வர வேண்டும் என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறாரோ என்னவோ?

நான் கடவுளை பொறுத்தவரை இன்னுமொரு ஆச்சர்யம். படத்தின் இயக்குனர் பாலா, மற்றும் ஆர்யா, பூஜா ஆகியோரை பாராட்டுவதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த படத்தில் நடித்த ராஜேந்திரநாத் (முரட்டு மீசையுடன் போலீஸ் அதிகாரியாக வருவாரே) என்பவரையும் அழைத்து முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பாராட்டினாராம்!

முன்னணி நடிகர்களே..., ரஜினியின் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதாது. பாராட்டுகிற விஷயத்திலும் ரஜினியாக இருக்க வேண்டும்!

Yogi B for Superstar Rajini



Singer Yogi B who has made his presence felt in the Tamil film industry with some spectacular songs, has been roped in to sing a song for the mammoth production ‘Endhiran’ that stars superstar Rajinikanth and Aishwarya Rai Bachchan.

A. R. Rahman who is the music director of the film has confirmed to Indiaglitz that Yogi B has indeed sung a song for the film. Moreover, he added that the Malaysian singer was in his studio a while back with regards to Endhiran. A. R. Rahman was working for the Aamir Khan starrer ‘Ghajini’ at that time. Though Yogi B was there was Endhiran, his services were used for a background score ‘Run’ that features in ‘Ghajini’.

Everything about ‘Endhiran’ is shrouded with complete secrecy as is the case with every Shankar film. ‘Endhiran’ produced by Sun Pictures will be ready for release in 2010.
thanks to
source:rajinilive.com

Rajini Obama

PRAYERS FOR FILM SUCCESS

தோற்று வெல்வதில் இன்னொரு கஜினி நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி




சூப்பர் ஸ்டாரை (ரஜினி) தமிழ்நாட்டின் நரேந்திர மோடியாக்க..


சூப்பர் ஸ்டாரை (ரஜினி) தமிழ்நாட்டின் நரேந்திர மோடியாக்க முயற்சித்து வருவதாக துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.நரேந்திர மோடியின் பொதுமேடை பிரச்சார தொகுப்பை அலையன்ஸ் நிறுவனம் 'கல்வியே கற்பகத் தரு' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதற்கான விழா சென்னை நாரதகான சபாவில் நடந்தது.விழாவுக்கு மோடி தலைமை வகித்தார். அரசியல் விமர்சகர் சோ ராமசாமி புத்தகத்தை வெளியிட நல்லி குப்புசாமி செட்டி அதை பெற்றுக் கொண்டார்.

விழாவில் சோ ராமசாமி பேசுகையில்,

பாஜகவுக்கு இப்போது இலங்கை தமிழர்கள் மீது காதல் வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீது நடத்தி வரும் போரை நிறுத்துங்கள் என குரல் கொடுத்திருக்கிறது. இலங்கை அரசு அங்குள்ள தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதை எப்படி நிறுத்தச் சொல்ல முடியும்?.

காஷ்மீரில் இந்திய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறினால் ஏற்க முடியுமா? எனது இந்த கருத்தை எந்த மேடையிலும் கூற எனக்கு உரிமை இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் என்னை இதை பேச சொன்னாலும் தைரியமாக இந்த கருத்தை வலியுறுத்துவேன். இந்த பிரச்சனையில் தெளிவான முடிவை எடுத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா தான்.

இங்கே பேசியவர்கள் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் சூப்பர் ஸ்டாரை தமிழ்நாட்டின் மோடியாக்க வேண்டும் என முயற்சிக்கிறேன். இது தான் சிறப்பாக இருக்கும். மோடியின் சாதனைகள் குஜராத்துடன் நின்றுவிடக் கூடாது. தேசிய அளவில் வளர வேண்டும், வளரும் என்றார் சோ.
நரேந்திர மோடி அன்புள்ள தமிழ் அன்பர்களே, என்று தமிழில் தனது பேச்சை தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். அவர் கூறுகையில்,

மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்திருக்கிறேன். இதுவரை ஒரு சிறு குற்றச்சாட்டு கூட எனது அரசு மீது யாரும் கூறியதில்லை. ஏன் தேர்தல் நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தவில்லை. கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சி முஸ்லிம் இளைஞர் எனது அரசு சிறப்பாக செயல்படுவதாக கூறியதற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஆனால் நான் கேரளாவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தை பற்றி அறிந்து அதனை குஜராத்திலும் நடைமுறைப்படுத்தினேன். நல்ல திட்டங்கள் எங்கு இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன்.

கடந்த 24 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவை இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர். இதனால் மக்கள் சோர்ந்து விட்டார்கள். அந்த இரண்டு குடும்பங்களையும் வீழ்த்து ஒபாமா அதிபராகி உள்ளார்.

இந்தியாவிலும் அந்த நிலை தான் இருக்கிறது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் இங்கும் குடும்ப அரசியலாகத் தான் இருக்கிறது. இதில் பாரதீய ஜனதா கட்சி மட்டுமே தனித்து விளங்குகிறது. அமெரிக்க மக்களிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். குடும்ப அரசியலில் இருந்து வெளியில் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவது எனக்கு தெரியும். ஆனால் குஜராத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. குஜராத்தில் 18 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. பிரதமரின் வீட்டுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்குமோ, அந்த வசதிகள் அந்த கிராமங்களிலும் கிடைக்கும்.

அனைத்து கிராமங்களிலும் பிராட்பேண்ட் வசதி உள்ளது. இந்த வசதி மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து 5ம் வகுப்பு மாணவர்களுடன் பேச இருக்கிறேன். அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறேன் என்றார் மோடி.

சிவாஜியின் super கணக்கு

Super Comedy-Siva

Our Japan Fans-Flash Back

Rare Pic NEWS : Flash Back



click the pic to zoom.

அனைவரையும் மதிப்பதில் ரஜினிக்கு நிகர் யாருமே இல்லை


'நான் கடவுள்' படத்தின் தாக்கத்திலிருந்து ரஜினியால் இன்னமும் மீள முடியவில்லை போலிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு அதில் கதாநாயகனாக நடித்த ஆர்யாவையும் இயக்குநர் பாலாவையும் நேரில் அழைத்து பாராட்டினார்.

இந்தப் படம் தன்னை ஒரு தமிழ் நடிகனாக பெருமை கொள்ள வைத்திருப்பதாகக் கூறினார் ரஜினி.

தற்போது அப்படத்தில் பார்வை இழந்த பெண்ணாக பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்த பூஜாவையும் வீட்டுக்கு அழைத்து, அவரது நடிப்பைப் பாராட்டி பரிசளித்துள்ளார் ரஜினி.

ரஜினியை சந்தித்த அனுபவம் பற்றி பூஜா நிருபர்களிடம் கூறியதாவது:

நான் கடவுள் படத்தின் மொத்தக் குழுவையுமே ரஜினி சார் வெகுவாகப் பாராட்டினார்.

பாலா சார், ஆர்யா எல்லாம் ரஜினி சாரைப் பார்த்தப்பவே, எனக்கும் ஒரு வாழ்த்து பூங்கொத்து அனுப்பியிருந்தார். ஆனால் அன்று நான் ஊரில் இல்லை. வீட்டுக்கு வந்து பார்த்தால், ரஜினி சார் அனுப்பிய பூங்கொத்து இருந்தது. எனக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. உடனே ரஜினி சாருக்கு போன் செய்தேன்.

என்னுடைய அதிர்ஷ்டம், எந்திரன் படப்பிடிப்பு கேன்ஸலாகி ரஜினி சார் வீட்டிலேயே இருந்தார். உடனே அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிட்டது.

சுமார் ஒரு மணிநேரம் ரஜினி சார் குடும்பத்துடன் இருந்தேன். எளிமை, அன்பு, அடுத்தவர்களைப் பாராட்டு ஊக்கப்படுத்துதல் எல்லாவற்றையுமே ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கணும். அப்பக்கூட அவர் மாதிரி அன்பாக நடந்துக்க முடியுமா தெரியல…

எனக்கு ஒரு ராகவேந்திரர் படமும், ஒரு சால்வையும் பரிசாகக் கொடுத்தார் ரஜினி சார்.

இதைவிட வேற விருதும் பாராட்டும்கூட எனக்குத் தேவையில்ல. என் திரையுலக வாழ்க்கை முழுமை பெற்ற மாதிரி சந்தோஷமாக இருக்கு.

விரைவில் என் குடுபம்த்தோட ரஜினி சாரைப் பார்க்கப் போறேன். இன்னும்கூட, என் பெற்றோரால ரஜினி என்னை நேரில் கூப்பிட்டு வாழ்த்தியதை நம்ப முடியல.

'கண்கலங்கிய ரஜினி…'

படத்தின் இறுதிக் காட்சியில் நான் பேசிய வசனங்களைக் கேட்டு தன்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டதாகக் குறிப்பிட்டார் ரஜினி சார். அவர் இதைச் சொன்னபோது, எனக்கு கண்கள் கலங்கிவிட்டன, மகிழ்ச்சியில்.

எல்லாப் புகழும் ஆண்டவனுக்கே என்பதுபோல, என்னுடைய இந்த எல்லாப் புகழும் பாலா சாருக்கே சேரும்.

நான் சொந்தக் குரலில் பேசியதை ரொம்ப பாராட்டினார், புதுப் படங்கள் ஒப்புக்கும்போது, கேர்புல்லா இருக்கணும்னு சொல்லியிருக்கார். நிச்சயம் அவர் சொன்னபடி நடப்பேன்…", என்றார் பூஜா நிறைவாக.

அரசன் The Don - SS New Movie




For further info on this please visit www.onlysuperstar.com

மரண அடி ! So called next superstar !


அடுத்த சூப்பர் ஸ்டார் என பிரகடனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட விஜய்நெட்.காம் இணையதளத்தை, விஜய் ரசிகர்களே இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளனர்.


இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோடம்பாக்கம் இளம் ஹீரோக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரமாகவும் இது மாறியுள்ளது.

நடிகர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சொந்தமாக இணையதளம் நடத்துகிறார்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கலைஞானி கமல் தவிர!.

நடிகர் விக்ரம் பெரும் செலவு செய்து தனது தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அஜீத் உள்பட பல ரசிகர்களும் வளர்ந்து வரும் விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கமலுக்கென்று சில ரசிகர்கள் இணைய தளம் நடத்த முயன்று, பின்னர் அவரது பெரும் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டது தெரிந்திருக்கும். இப்போது அவரே மய்யம் என்ற தனது பத்திரிகையைத் தொடங்கப் போவதாகவும், அதை இணையதள வடிவிலும் தரப் போவதாகவும் கூறியிருந்தார். எதையும் தானே நேரடியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்ற 'பர்ஃபெக்ஷன் உணர்வு' காரணமாக அவரது அந்த முயற்சி தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் நிலையே வேறு. அவர் இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தாவிட்டாலும், அவருக்கென்று ஏகப்பட்ட இணையத் தளங்கள், வலைப்பூக்கள் நடத்தப்படுகின்றன.

விஜய்யின் அதிகாரப்பூர்வ இணையதளம்:

இந்த சூழ்நிலையில்தான் விஜய்க்கென்று அவரது ரசிகர்களைக் கொண்டு ஒரு அதிகாரப்பூர்வ இணைய தளம் அணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர். விஜய்நெட்.காம் (http://www.vijaynet.com/) எனும் பெயரில் சில இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த தளம், இப்போது உள்ளடி வேலைகள் சிலவற்றால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த உதவியும் செய்யாததாலும் விஜய்யின் ஸ்டில்கள், செய்திகளைக் கூட தர மறுப்பதாலுமே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் விஜய்நெட்.காம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஜய் தரப்பில் கருத்தறிய முயன்றபோது, 'அப்புறமா பேசுங்க' என்று கூறிவிட்டனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

விஜய்நெட்.காமில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள மூடல் அறிவிப்பு விவரம்:

அன்பு ரசிகர்களே,

விஜய் பேன்ஸ் நெட்வொர்க் எனும் இந்த தளத்தை மிகுந்த வருத்தத்துடன் இன்றோடு மூடுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே இதை மூடுகிறோம்.

ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள்.

எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணைய தளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது.

எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம். விஜய் படங்களை ரசிக்கும் சாதாரண ரசிகர்களாகத் தொடர்வோம். ஆனால் அதற்காக அவர் படங்களைக் கொண்டாட மாட்டோம். உலக அளவில் அவரது படங்களைத் தூக்கிவிடும் ப்ரமோஷனல் வேலைகளில் இனி ஈடுபட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இப்படிக்கு

விஜய்பேன்ஸ் நெட்வொர்க் நி்ர்வாகம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ஞானம்!

source:thatstamil.com

Rajini Dhoni Epl


This artical quoteted from on of our fan who send the message to Behindwoods.com:http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-05-02-09.html
Dear friends,

I have an interesting initiative for promotion of 'ENDHIRAN'. This can work out very well for Thalaivar Rajini, Shankar and Sun Pictures. After the next 2 or 3 months, it is going to be IPL fever in India. Why cannot ENDHIRAN be a major promoter to IPL? IPL has won immense hearts of cricket fans in India and around the world. Especially, Chennai Super Kings (CSK) is the second best team and is very popular. India Cements Pvt. Ltd. has been sponsoring CSK. Sun Network can turn out to be official sponsors or co-sponsors for Chennai Super Kings. If that is the case there can be an extensive publicity for ENDHIRAN in IPL, because Boss is the image for Chennai. Remember, even Dhoni imitating Thalaivar in IPL – 08? ENDHIRAN is a mega-budget film, around 165 crores, and it needs nation-wide and international marketing to become a mega world-wide blockbuster.

And if stills and clips of the film are released by SUN PICTURES during IPL-'09 as part of promoting the film, just imagine how big would be its reach. Even yesterday, we heard Shilpa Shetty, sponsoring 75 crores for Rajasthan Royals. And now, SUN NETWORK, being a major entertainment house and having a sound political background, they can attract world media and fans towards ENDHIRAN if they sponsor for Chennai Super Kings. And they will financially have no drawbacks or no setbacks. Remember Thalaivar is also a cricket fan. So, if you fans are ready to accept this idea of mine, why can't we, together, post a request to Sun Network, Sun Pictures and Maran brothers? Please think about it and give a positive response. This is one golden opportunity by means of which we, fans, can be really influential in making this movie a MEGA BLOCKBUSTER.


Thank you,

Regards,
Rajarajan.S
rajarocking_yamaha@yahoo.co.in

Rajini Comic