Here is Hrithik Roshan as a child artist in 3 movies...He has worked with Rajnikant in Bhagwaan dada.
ஈழத் தமிழர்களை காப்போருக்கே ஓட்டு-ரஜினி ரசிகர்கள்
Linked by
MoDeStOrEaN
அரக்கோணம்: இலங்கை தமிழர்களை பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கே வாக்களிக்கப் போவதாக ரஜினி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அப்போது, இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அதோடு கூட்டணி அமைக்கும் மாநில கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரஜினி மன்றத்தினரின் முடிவைத் தொடர்ந்து திமுகவினரும், காங்கிரஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் இறங்கியுள்ளனராம்.
இந்தத் தேர்தலில் ரஜினி எந்தப் பக்கமும் சாயாமல நடுநிலை வகிக்கும் நிலையில் ரசிகர்கள் கோதாவில் குதித்துவிட்டனர்
Next TR : 'so called next Superstar'
Linked by
MoDeStOrEaN
on Wednesday, March 18, 2009
Watch it untill the end.Thank you
India's 50 - Most 'Power'
Linked by
MoDeStOrEaN
on Thursday, March 12, 2009

இந்தியாவின் 50 சக்தி வாய்ந்த பிரமுகர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா டுடே இதழ், இந்தியாவின் டாப் 50 பிரமுகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்திய அரசியல் மற்றும் அரசியல் அல்லாத துறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்த பட்டியல் இது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரஜினிகாந்த், தென்னிந்திய திரைத் துறையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்கிறார். ரஜினிகாந்த் இல்லாமல், இந்திய சினி்மாத்துறை இல்லை என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
முன்பு பல சந்தர்ப்பங்களில் ரஜினிகாந்த்தை இந்தியா டுடே விமர்சித்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத் துறையினரிடையே பெருந்தன்மையான மனதுக்குச் சொந்தக்காரராக ரஜினி விளங்குகிறார். பாபா, குசேலன் படங்கள் தோல்வி அடைந்தபோது விநியோகஸ்தர்களின் நஷ்டத்தைக் களைய பல கோடி ரூபாய்களை திருப்பிக் கொடுத்த அதிசய மனிதர் ரஜினி எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம்
Linked by
MoDeStOrEaN

Bangalore: ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கர்நாடக ரஜினி ரசிகர்கள் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
இலங்கைப் பிரச்சினை முன்னெப்போதும் இல்லாத உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தங்களையும் அதில் ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
கர்நாடக மாநில ரஜினி சேவா சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமைதிப் போராட்டம் நடத்தினர்.
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தியும் பலர் பேசினார்கள்.
இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உலகத் தமிழ் கழகம், அகில இந்திய மனித உரிமைக் கழகம், திராவிடர் கழகம், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றவர்கள்.
எந்திரன் படத்தின் டைட்டில் பாடல் !
Linked by
MoDeStOrEaN
on Saturday, March 7, 2009

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தின் டைட்டில் பாடலை ஹைதராபாத்தில் படமாக்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், விவேக் நடிக்க ஷங்கர் இயக்குகிறார்.
இப்படத்தின் டைட்டில் பாடலை இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக படமாக்கவுள்ளார் ஷங்கர்.
ஷங்கர் டைப் பாடலமாக இது இருக்குமாம். இந்தப் பாடலில் ஹீரோ ரஜினி மீதான தனது காதலை பொழிந்து ஐஸ்வர்யா ராய் பாடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கலை இயக்குநர் சாபு சிரில் உருவாக்கியுள்ள கண்கவர் பிரமாண்ட செட்டில் வைத்து இந்தப் பாடலை படமாக்கவுள்ளனர். படத்தின் பிரமாண்ட ஹைலைட்டாக இது அமையும்.
இந்தப் பாடலலில் ஐஸ்வர்யாவுடன் 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் பங்கேற்கின்றனர். அனைவரும் ரஜினி இப்படத்தில் அணிந்து நடித்துள்ள சில்வர் கிரே கலரிலான உடையில் வருகின்றனராம்.
படமாக்கப்படவுள்ள இந்தப் பாடலை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான், மதுஸ்ரீ குரலில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட பெரும் பொருட் செலவிலான பாடல் காட்சிகளில் இதுவும் ஒன்றாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காரணம், குரூப் டான்ஸர்கள் போட்ட டிரஸ்ஸே படு காஸ்ட்லியாம்.
நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் திருமணம்
Linked by
MoDeStOrEaN

நடிகர் மோகன் பாபுவின் மூத்த மகன் விஷ்ணு மஞ்சு பாபுவுக்கும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ். சுதீகர் ரெட்டியின் மகள் விரானிகாவுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
விஷ்ணு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு- விரானிகா திருமணம் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌளி உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. சினிமா செட்கள் போல அமைத்து மிகப் பிரமாண்டமாக இத்திருமணம் நடத்தப்பட்டது.
இதில் ரஜினி, அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இந்த திருமண விழாவில் பங்கேற்றனர்.
இசைஞானி இளையராஜா, இயக்குனர் பி.வாசு ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர். நடிகைகள் ஜெயசுதா, ஜெயபிரதா, ஜமுனா, ஜீவிதா, பிரியாமணி மற்றும் தாசரி நாராயணராவ், தெலுங்கு நடிகர்கள் கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், பிரபாஸ், அல்லு அரவிந்த், உள்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். கட்சி பாகுபாடுகளுக்கு அப்பால், அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.